எந்த விதமான அரசியல் கருத்துகளையும் பேசப்போவதில்லை – விடுதலையான பரூக் அப்துல்லா பேட்டி

எந்த விதமான அரசியல் கருத்துகளையும் பேசப்போவதில்லை என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவரை விடுவிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.எனவே ஸ்ரீநகரில் 7 மாதங்களுக்கு மேலாக வீட்டுக்காவிலில் இருந்த பரூக் அப்துல்லா இருந்து விடுவிக்கப்பட்டார்.

இதன் பின்னர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் ,என்னிடம் பேச வார்த்தையில்லை. நான் இன்று சுதந்திரம் பெற்றேன். மற்ற தலைவர்கள் விடுவிக்கப்படும் வரை எந்த விதமான அரசியல் கருத்துகளையும் பேசப்போவதில்லை. பின், எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.