ஹர்திக் பாண்டியாமற்றும் யுவராஜ் சிங் அசத்துவார்கள்: ஜாகிர் கான் பேச்சு!!

  • ஐ.பி.எல் தொடரில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படுவார் என முன்னாள் வீரர் ஜாஹிர் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் சீசனில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் யுவராஜ் சிங் ஆட உள்ளதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுத்தது ஏன் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகியாக இருக்கும் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜாகீர் கான், யுவராஜ் சிங் அணிக்காக வெற்றியை தேடித்தரக்கூடிய திறன் பெற்றவர். அதனால் அவர் அணியில் இருப்பதே அணிக்கு ஒரு உத்வேகம். எங்கள் அணியின் மிடில் ஆர்டர் சிக்கலைத் தீர்க்க அனுபவம் வாய்ந்த ஒரு தேவை என்பதை உணர்ந்துதான் யுவராஜ் சிங்கை எடுத்தோம். மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங்கை விட சிறந்த வீரர் வேறு யாராக இருக்க முடியும் என்று தனது முன்னாள் சக வீரரான யுவராஜ் சிங்கை புகழ்ந்தார் ஜாகீர் கான்.

மேலும் ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய, எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் ஹர்திக் பாண்டியா மிக முக்கிய பங்காற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.

 

author avatar
Srimahath

Leave a Comment