தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட நடிகர் தனுஷ்!

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்தாண்டு, வெற்றிமாறன் இயக்கத்தில், உருவான திரைப்படம் வடசென்னை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இதுகுறித்து, நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “என் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்படக் காரணம் எதுவென்று தெரியவில்லை. வடசென்னை 2-ம் பாகம் உருவாகும் என்றும், அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால், நானே எனது அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.