முகமூடிக்கு தடை விதித்த ஹாங்காங் அரசு! அதற்கும் சேர்த்து முகமூடியோடு போராடும் மக்கள்!

ஹாங்காங் நாட்டு விவகாரத்தில் சீன நாட்டின் தலையீடு அதிகமாகவே உள்ளது. இதனை கண்டித்து பல மாதங்களாக ஹாங்காங் மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆண், பெண் என அனைவரும் ஒரு சேர போராடி வருகின்றனர்.
இவர்கள் ஹாங்காங் நாட்டு தலைவரையும் பதவி விளக்க சொல்லி போராடுவதால், அரசு போராட்டகாரர்களை கண்காணிக்கும் படி கூறியிருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள் முகமூடி அணிந்து கொண்டு போராடுவதால் அவர்களால் போராட்டக்காரர்களை கண்டறிய முடியவில்லை.
இதனால் அந்நாட்டு அரசு முகமூடி அணிய தடை விதித்தது. ஆனால், போராட்டக்காரர்கள் அதற்காகவும், விடிய விடிய தற்போது போராடி வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.