ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு முதலமைச்சர் பழனிசாமிக்கும் தமிழக அரசுக்கும் விடப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தமிழக அரசு மற்றும் காவல்த்துறையை அவதூறாக பேசியது பெரும் சர்சையானது.
இந்நிலையில் இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு முதலமைச்சர் பழனிசாமிக்கும் தமிழக அரசுக்கும் விடப்பட்ட சவால்.மேலும் தமிழகத்தில் ஊழல் ஓழிப்புச்சட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.