ஹெச்.ராஜா கோபக்காரர் தான், கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும்- முதலமைச்சர் பழனிசாமி

தூங்கிக் கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் ,வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல்  தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.மேலும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஆலங்குடியில் சிவகங்கை மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜேவுக்கு  வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் முதலமைச்சர் பழனிசாமி.அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,ஹெச்.ராஜா கோபக்காரர் தான் என்றும்  கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் .தந்தையே ஒன்றும் செய்யாத போது மகன் கார்த்தி சிதம்பரம் என்ன செய்யப்போகிறார் என்று கூறினார்.

அதேபோல்  தூங்கிக் கொண்டிருக்கும் ஸ்டாலினை எழுப்பினால் என்னை திட்டிக்கொண்டேதான் எழுந்திருப்பார் என்றும்  ஸ்டாலினுக்கு தேர்தல் ஜூரம் வந்து என்ன பேசுவது என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Leave a Comment