750 கோடி மோசடி செய்ததாக ஜி.வி.கே ரெட்டி மற்றும் மகன் மீது புகார்!

மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் 750 கோடி ஊழல் செய்ததாக ஜிவிகே குழும தலைவர் ரெட்டி மற்றும் அவரது மகன் மீது சிபிஐ வழக்கு பாய்ந்துள்ளது.

சர்வதேச விமான நிலையமான மும்பையில் மேம்பாட்டு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 750 கோடியை ஊழல் செய்து கொண்டதாக GVK குழுமத்தின் தலைவர் ரெட்டி மற்றும் அவரது மகன் சஞ்சய் மீது சிபிஐ போலீஸார் FIR பதிவு செய்துள்ளனர்.

மும்பை விமான நிலையத்தின் 50.5 சதவிகித பங்குகளை வைத்திருக்கும், ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட GVK குழுமம் மும்பை விமான நிலையத்தின் மேம்பாட்டு பணிகளுக்காக உள்ள 750 கோடியை ஊழல் செய்ததால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

author avatar
Rebekal