கொரோனா நோய்க்கு ஜி.வி.பிரகாஷின் ட்வீட்!

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  இந்த நோய் குறித்து பலரும்மறிவுரை வழங்கி வருகின்றனர். 

இதுகுறித்து, இசையாய்ப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலிலும் உலகெங்கும் பல லட்சக்கணக்கான மக்கள் அதை வென்று மீண்டு வந்துள்ளனர்.  நாமும் விழிப்புடன் இருப்போம். வருமுன் காக்க முடியும் என்பதால் அதையே தற்போதைய மருத்துவமாக கையாள்வோம்.’ என பதிவிட்டுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.