குஜராத்தில் கொரோனா பாதிப்பால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

குஜராத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 70 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால், குஜராத்தில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை PTI தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. 

author avatar
murugan