“குரூப் 2” தேர்வில் மொழிப் பாடத்தை நீக்கியதால் பொங்கி எழுந்த கனிமொழி !

தமிழகத்தில் அரசு சார்ந்த வேலைக்கு தகுதி தேர்வாக டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 தேர்வுகள் உள்ளன. இந்நிலையில், தற்போது குரூப் 2 தேர்வில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல்நிலை தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டுள்ளதாகவும் மொழித்தாளுக்கு மாறாக பொது அறிவு வினாக்கள் அதிகமாக கேட்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளனர்.

இதுக்குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தமிழ் மொழிப் பாடத்தை நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெறிவித்துள்ளார். தமிழே தெரியாமல் பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் தமிழக அரசுப் பணியில் சேருவதற்கே இது வழி வகுக்கும். தமிழக அரசு உடனடியாக இந்நடவடிக்கையைக் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

author avatar
Vidhusan