குரூப் 2 தேர்வு முறைகேடு – 12 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

குரூப் 2 தேர்வு முறைகேடு – 12 பேருக்கு சிபிசிஐடி சம்மன்

 குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக 12 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது.இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்  குரூப் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக 12 பேருக்கு சிபிசிஐடி போலீசார்  சம்மன் அனுப்பியுள்ளனர். கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரத்தில், 2011-ல் நடைபெற்ற தேர்வில் முறைகேடு என புகார் எழுந்துள்ளது.பல்வேறு பதவிகளில் இருக்கும் 12 பேரும் ஒரே கிராமத்தில் இருந்து தேர்ச்சி பெற்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 பேரும்,நாளை கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

Join our channel google news Youtube