பிரபல நடிகையின் உயிருக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்து- மருத்துவமனையில் அனுமதி !

 நடிகை நடாஷா சூரி அண்மையில் இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்கு கடை திறப்பு விழா முடிந்தவுடன் பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார்.

பங்கி ஜம்பிங் செய்யும்போது துரதிர்ஷ்டவசமாக அவரது கயிறு பாதியிலேயே அறுந்து விழுந்துள்ளது.

பங்கி ஜம்பிங் செய்தது ஆற்றை ஒட்டிய இடம் என்பதால் கயிறு அறுந்தவுடன் தலைகீழாக ஆற்றின் உள்ளே விழுந்துள்ளார். தற்போது அவர் இந்தோனேஷியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

24 மணி நேரத்திற்கு நடாஷா மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளாராம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment