சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்திடம், ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த ஒரு நல்ல மனிதர் என்றும் விஜயகாந்திற்கு, எங்களது குடும்பத்திற்கும் அவர்மீது மரியாதை உண்டு என கூறினார். இதையடுத்து ரஜினிகாந்த் தனது அரசியல் நிலையை தெளிவாக கூறிவிட்டார். கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை. அதனால் தமிழகத்தில் ஒரு வெற்றிடம் உள்ளது என்று ரஜினி கூறுகிறார். வரும் 2021ம் ஆண்டு தேர்தலில் இதற்கெல்லாம் ஒரு நல்ல முடிவு வரும் என்றும் நிச்சியம் தமிழகத்தில் மாபெரும் அரசியல் மாற்றம் நிகழப்போவது உறுதி என்று தெரிவித்தார்.