அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா!

பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவ மாணவிகளின் பாதுகாப்பு கருதியும், மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தவிர்க்கவும், அனைத்து பள்ளி வாகனங்களிலும், ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று, கோபி கிருஷ்ணன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கு, விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரரின் கோரிக்கை குறித்து பள்ளி கல்வி துறை விளக்கமளித்தால்தான் சரியாக இருக்குமென நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கை ஜூலை 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.