அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! உயர்நீதிமன்றம் உத்தரவு!

அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தேன்மொழி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது குறித்து இன்று வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘ அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்வது நன்னடத்தை ஆகாது. இரண்டாவது திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். அவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கையும், குற்றவியல் வழக்கும் பதியப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ‘ ஓய்வூதியம் சம்பந்தமாக அரசு ஊழியர்கள் தங்கள் மனைவி பெயர் மற்றும் விவரங்களை தரும்போது அது சரியான தகவல்தானா என்பதை சரிபார்க்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.