மக்களின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்!அமைச்சர் கே. பாண்டியராஜன் விளக்கம்….

மக்களின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் என தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முன்னேற மத்திய அரசின் உதவி அவசியம் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்திற்கு தேவையான உதவிகளைப் பெற, ஆளுநர் புரோஹித், மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தை அளித்து வருவதாகவும், இதனால் தான் மக்களின் ஆளுநர் என்று ஆளுநரைப் புகழ்ந்து கூறியதாகவும் அமைச்சர் கே. பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்….
source: dinasuvadu.com

Leave a Comment