ஹெச்.ராஜாவை சந்தித்த  ஆளுநர்..!ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி  புகார் ..!

ஹெச்.ராஜாவை சந்தித்த  ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி  காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார்.
இதனால் திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக எச். ராஜா உள்ளிட்ட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்தனர்.அவர் மீது காவல்துறை சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியரின் உத்தரவை மதிக்காமல் பேசுதல், பிற மதத்தினரை புண்படுத்தும் விதமாக பேசுதல், ஆபாசமாக பேசுதல் என பிரிவு (143 ,188 ,153 (A),290, 294 (b) 353 ,505 (1 )(b )(c ),506 (I)IPC) உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனால் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை கைது செய்ய காவல்துறை 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட இரு தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றது.பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை தலைமறைவாகிவிட்டதாக அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.மறு நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது.இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே அதே நாளில் உயர்நீதிமன்றத்தை தரக்குறைவான வார்த்தைகளால் ஹெச்.ராஜா விமர்சித்ததாக வழக்கறிஞர்கள் சி.ராஜசேகர்,காங்கிரசை சார்ந்த சுதா,கனகராஜ் மற்றும் ராஜா முகமது உள்ளிட்டோர் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க முறையிட்டனர்.ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இதை விசாரிக்க மறுத்து மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், கல்யாண சுந்தரம் அமர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.மேலும் முறையிட்டவர்களை போலீசிடம் புகாரளிக்க நீதிபதி அறிவுரை வழங்கியுள்ளனர்.முகாந்திரம் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்தனர்.
ஒரு அமர்வு மறுத்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.செல்வம் அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Image result for h.raja panwarilal
செப்டம்பர் 25 ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு தெரிவித்தார்.தாமாக முன் வந்து விசாரிக்க கூடாது என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் முறையிட்டுள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் ஹெச்.ராஜா தரப்பு முறையிட்டார்.

அதேபோல் சி.டி.செல்வம் அமர்வு தன்னை ஆஜராக உத்தரவிட அதிகாரம் இல்லை என்று முறையிட்டுள்ளார். மேலும் என் மீது சிடி செல்வம் அமர்வு சுவோமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியாது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே சுவோமோட்டா வழக்குப் பதிவு செய்ய முடியும்.
இதற்கு உத்தரவு நகல்களை தாக்கல் செய்தால் ஆய்வு செய்யப்படும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு பதில் அளித்தது.
Image result for banwarilal
அதேபோல்  சென்னை ராஜ்பவனில் உள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா திடீரென்று அன்றே  சந்தித்தார்.சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நீதிமன்றத்தை அவதுறாக பேசிய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட ஹெச்.ராஜாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித்தை கடந்த செப்டம்பர் 25ம் சந்தித்து, அடைக்கலம் கொடுத்துள்ளார் என்று ஆளுநர் பன்வாரிலால் ப்ரோகித் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி வழக்கறிஞர் துரைசாமி சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Leave a Comment