#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..!

#IPL2020: சதம் விளாசிய தவான்.. 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி..!

இன்றைய 38-வது போட்டியில் பஞ்சாப் Vs டெல்லி அணிகள் மோதி வருகிறது. இப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்கத்திலே பிருத்வி ஷா 7 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், இறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட் இருவரும் தலா 14 ரன் எடுத்து வெளியேறினர்.

இதைத்தொடர்ந்து, ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிகர் தவான் சதம் விளாசி, 106* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் நின்றார். அதில் 12 பவுண்டரி , 3 சிக்ஸர் அடங்கும். தவான் தொடர்ந்து 2-வது போட்டியில் சதம் அடித்துள்ளார்.

இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் எடுத்தனர். 165 ரன் இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube