விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு

விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் -காவல்துறை வழக்குப்பதிவு

விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.இதனால் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்க விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முரளி தரன் கூறினார். இதனையடுத்து  எல்லாம் முடிந்துவிட்டது இது குறித்து பேச வேண்டாம் என்று விஜய் சேதுபதி கூறினார்.

இதற்கு இடையில் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அந்த நபரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூகவலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube