“பாஜகவிற்கு வேற வேலை இல்ல.. அதான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது” – சீமான்

“பாஜகவிற்கு வேற வேலை இல்ல.. அதான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது” – சீமான்

பாஜகவிற்கு வேற வேலை இல்ல. அதான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 219 ஆம் ஆண்டு நினைவு தினவிழா கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், 7.5 சதவீத விழுக்காடு மசோதாவை கிடப்பில் போட வேண்டும் என்பதற்காக ஆளுநர் தாமதிக்கிறார் என பேசிய அவர், அதற்குள் தேர்தல் வந்து விடும் என கூறினார். மேலும் மனுதர்மம் நூலில் பெண்களுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட இல்லையென கூறிய அவர், பாஜகவிற்கு வேற வேலை இல்ல. அதான் திருமாவளவனை எதிர்த்து போராடுகிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube