மக்களின் உணர்வுகளை புரிந்து, தமிழக அரசு செயல்பட வேண்டும் – எம்.பி. திருநாவுக்கரசர்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை ரூ.3 உயர்த்தி இருப்பதன் மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 12 மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதேபோல் தமிழக சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் மத்திய அரசை கண்டித்து அதிமுக அரசு பயப்படுவதாக விமர்சித்த அவர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தமிழக அரசு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்