தமிழக அரசே இதுபோன்ற செயலை நிறுத்தி கொள்ளவும் – மக்கள் நீதி மய்யம் கண்டனம்.!

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

இதற்காக சாட்சி என்ற பெயரில் தங்கள் கட்சி தலைவர் கமல்ஹாசனை, காவல் நிலையத்துக்கு வரவழைத்து 3 மணிநேரம் தமிழக காவல்துறையினர் விசாரணை நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் கட்சியின் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு, காவல்துறை மூலமாக விசாரணை நடத்தி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுபோன்ற செயலை தமிழக அரசு இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்