ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல அரசு ஊழியர்கள்! கடுமையான நடவடிக்கை தேவை

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல அரசு ஊழியர்கள்! கடுமையான நடவடிக்கை தேவை

கொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல அலையும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஒரு மாவட்டத்தில் இருந்து, மற்ற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் எடுத்து தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இ – பாஸ் எடுப்பதற்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை இரும்பு கரங்களை கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், கொரோனா காலத்திலும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல அலையும் அரசு ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube