குறைந்த கட்டணத்துடன் ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகள்!

திருமணங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு விரைவு பேருந்துகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்தாலும் மக்களுக்காக அரசு அவ்வப்போது சில தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்பொழுது இன்று சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி தொழில் நிறுவனங்களின் தேவைகளுக்காக குழுவாக வெளியில் செல்வதற்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும், தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஒப்பந்த ஊர்தி அடிப்படையில் குறைந்த கட்டணத்தில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தேவைப்படுபவர்கள் இந்த பேருந்தை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. மேலும் கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் அரசு அலுவலர்களை அணுகவும், அதற்கான மின்னஞ்சல் முகவரி செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal