வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கூகுள் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் கூகுள் ஊழியர்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பல நிறுவங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தினார்கள். சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது பணியாளர்களை அடுத்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி அளித்தது.

இதற்கிடையில், வீட்டில் இருந்தே பணி புரியும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை, வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கபட்டது. தற்போது வீட்டில் இருந்து பணிபுரியும் பணியாளர்கள் உணரும் சில சிக்கலைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம், தனது தொழிலாளர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் கூகுள் நிறுவனம் ஒரு முறை ஊதிய விடுமுறையாக வெள்ளிக்கிழமை விடுமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஊழியர்களுக்குப் பயன்படும். இதனை பல  நிறுவங்களும் பின்பற்றுவார்கள் என கருதப்படுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.