குட் நியூஸ்.! சென்னையில் சலூன் கடைகளுக்கு அனுமதி.!

தமிழகத்தில் ஜூன் 1 முதல் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, மேலும் புதிய தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் உள்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.அதில் முக்கியமாக சலூன் கடைக்கு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் சென்னையை குறிவைத்து நாள்தோறும் தாக்குகிறது, ஆனாலும் இன்று  தமிழக அரசு சில தளர்வுகளை சென்னைக்கு அளித்துள்ளது.அதில் முக்கியமாக முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாடு நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் தனி நபர் இடைவெளியுடன் அமர்ந்து இருந்து செய்லபட அனுமதி.இது சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி தான்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.