செழிப்பையும் செல்வத்தையும் வழங்கட்டும்- குடியரசு தலைவர் வாழ்த்து

குடியரசு தலைவர் நாட்டு மக்களுக்கு தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நவராத்திரியின் 9வது நாளான இன்று அன்னையின் வெற்றியை கொண்டாடும் விஜயதசமியாகவும்,தசராவாகவும்,மகாநவமியாகவும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

 குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நாட்டு மக்களுக்கு தனது தசரா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தசரா வாழ்த்துக்கள் மற்றும் அனைத்து நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த திருவிழா சத்தியத்தின் வெற்றியையும், அநீதியின் மீதான பொய்யையும் குறிக்கிறது.

தொற்றுநோயின் விளைவுகளிலிருந்து அனைவரையும் பாதுகாத்து,நாட்டு மக்களுக்கு செழிப்பையும் செல்வத்தையும் கொண்டுவரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
kavitha