பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – முதல்வர்

பாடகர் எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – முதல்வர்

எஸ்.பி.பி அவர்கள் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல் துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பி. சுப்பிரமணியம் கடந்த 50 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கொரோனாவில் இருந்து மீண்டபோதும், நுரையீரல் பாதிப்பால் இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி.பியின் உடல் நுங்கப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.பி அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

தற்போது, எஸ்.பி.பி யின் உடல் நுங்கப்பாக்கத்தில் அவரது வீட்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் தாமரைப்பக்கத்தில் உள்ள பண்ணைவீட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube