புஜாரா உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது இங்கிலாந்து கவுண்டி அணி!

இங்கிலாந்து, கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இருந்த புஜாராவின் ஒப்பந்தம் ரத்து செய்யபட்டுள்ளது.  

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் புஜாரா. மார்ச் முதல் மே மாதம் வரையில் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடைபெறும். அந்த காலகட்டத்தில் புஜாரா இங்கிலாந்து நாட்டில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்பார். 

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுக்க பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து நாட்டிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி இருக்கிறது. இதனால் மே மாதம் 28 வரையில் எந்தவித விளையாட்டு போட்டியும் நடைபெற கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், 

இங்கிலாந்து நாட்டில் நடைபெற இருந்த க்ளோசெஸ்டர்ஷைர் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க இந்திய வீரர் புஜாராவுடன் போடாட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.