சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை – தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பேட்டி

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை – தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பேட்டி

சாத்தான்குளத்தில் அருகே 8 வயது சிறுமி கொல்லப்பட்ட நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பேட்டியளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நேற்று முன்தினம்  மதியம், வடலிவினை இசக்கியம்மன் கோவிலுக்கு அருகே உள்ள சிறிய பாலத்தின் அடியில் முத்தார் என்ற அந்த 8 வயது சிறுமி, தண்ணீர் பிடிக்கும் ட்ரம்மில் காயங்களுடன்  பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தான்குளம் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தூத்துக்குடி, மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் மற்றும் நிதிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என சாத்தான்குளம் சிறுமி கொலை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் பேட்டியளித்தார். இந்நிலையில் சிறுமியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட முத்தீஸ்வரன் ஒப்புக் கொண்டுள்ளதாக எஸ்பி கூறினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube