புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் கிரிஷ் கர்னாட் பெற்றுள்ள விருதுகள்!

கன்னட திரைப்பட நடிகர், இயக்குனர்,முற்போக்கு எழுத்தாளர்,நாடக ஆசிரியர் என்று பன்முகத்தன்மை கொண்டருமான கிரிஷ் ரகுநாத் கர்னாட் உடல்நலக்குறைவால் இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 81.
கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடகம் இயற்றி வந்த இவர் மத்திய மாநில அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவருடைய நாடகங்கள் அனைத்தும் தற்காலிக பிரச்சனைகளை பற்றியனவாக இருக்கும். இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
சமீபத்தில், கர்நாடக அரசின் இலக்கியத்திற்கான உயரிய விருதான ஞானபீட விருதினை பெற்றுள்ளார்.
கிரிஷ் கர்னாட் மறைவுக்கு கர்நாடக அரசின் சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.