கஜா புயல் பாதிப்பு…!இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு…!

கஜா புயல் பாதிப்புகளை  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  ஆய்வு செய்கிறார்.

தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.

புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கஜா புயல் பாதிப்புகளை  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று  ஆய்வு செய்கிறார்.இதற்காக அவர் இன்று  தமிழகம் வருகிறார்.அதன் பின்னர் பிற்பகலில் ஆய்வு மேற்கொள்ள செல்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment