பக்தர்களை கவரும் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்

பக்தர்களை கவரும் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்

கும்பகோணத்தில்  பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்  இந்த ஆண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

கும்பகோணம் மாவட்டத்தில் உள்ள பாலக்கரை அருகே பகவத் விநாயகர் கோயில் உள்ளது.இந்த கோவிலில்  விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயிலில் பணத்தாள் மற்றும் காசுகள் கொண்டு விநாயகருக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இந்த விநாயகரை பக்தர்கள் அனைவரும் வழிபட்டு வருகின்றனர் .பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Join our channel google news Youtube