காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது..!முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாளை நாடுமுழுவதும் மகாத்மா காந்தியின் 150 -வது  பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது .இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த  5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவல் விருது என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில்  கூடுதல் எஸ்.பி. வேதரத்தினம், காவல் ஆய்வாளர் பிரகாஷ், எஸ்.ஐ. ராஜேந்திரன், தலைமைக் காவலர்கள் திருக்குமார், கோபி ஆகியோருக்கு விருது அறிவித்துள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.

Leave a Comment