தானே, வர்தா, ஒகி வரிசையில் கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது …!  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தானே, வர்தா, ஒகி வரிசையில் கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின் தரங்கம்பாடி கடற்கரை பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதன் பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,தானே, வர்தா, ஒகி வரிசையில் கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கஜா புயலால் விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது .கஜா புயலில் 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை என்றும்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment