கொரானாவை கட்டுப்படுத்த 370 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு! ஜி-20 மாநாட்டில் முடிவு!

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் வீட்டில் முடங்கி போய் உள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்குகிறது. உலகம் முழுக்க 22 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை இந்த வைரஸ் பலிகொண்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதை அடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா, அமேரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா , பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகள் சேர்ந்த கூட்டமைப்பான ஜி-20 குழுமத்தின் சார்பாக மாநாடு நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. இதில் காணொளி மூலம் இந்திய பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இந்த ஜி-20 மாநாட்டில் உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த 5 டிரில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 370 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படுவதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.