ஆண்டிபட்டியில்  இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்  இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடைமுறைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.,மேலும், தேனி மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து தான் வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தேனி மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதித்தோர் எண்ணிக்கை 1,128 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தாசில்தார் சந்திரசேகரன் தலைமையில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் இன்று (ஜூலை 7) முதல் (ஜூலை 17) வரை 10 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.