அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பு: கட்டாய விடுப்பில் இருக்கும் ஊழியர்கள்….!!

அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பதால் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர்.
அமெரிக்கா- மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த மசோதா குறித்து ஆலோசிக்க கூடிய செனட் சபையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் 9 அரசுத் துறைகள் முடங்கியுள்ளன.
பிரமாண்ட எல்லை சுவருக்கு செனட் சபையில் எதிர்ப்பு தொடர்வதால் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னரும் அரசு ஊழியர்கள் வேலைக்கு திரும்ப முடியாமல் கட்டாய விடுப்பில் உள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment