வாக்கு இயந்திரங்களில் மோசடி ! தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இந்தநிலையில் நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பில் பாஜகதான் முன்னிலை பெரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுவருகிறார்.இதற்காக முக்கிய எதிர்கட்சித்தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.மேலும்

வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக இன்று  தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்க ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment