மேஜை விழுந்ததில் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு..!

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள குகட்பள்ளி ஹௌசிங் போர்டு தெருவை சேர்ந்தவர், ருக்மணி. இவர், அந்த பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விக்ரம் (5) மற்றும் ரித்திக் ரோஷன் (4) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை அன்று, ருக்மணி விக்ரமுடன் வெளியே சென்றுள்ளார். வீட்டில் ரித்திக் தனியாக தூங்கிக்கொண்டிருந்தான். அப்பொழுது வீட்டில் இருந்த மர மேஜை, எதிர்பாராதவிதமாக ரோஷன் மீது விழுந்தது.

இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்து மேஜைக்கு கீழ் இருந்த ரோஷனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார். அவரை மீது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள். இந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.