அத்திவரதரை காண வந்த கூட்டத்தில் சிக்கி 4 பேர் மயக்கம்! 180 பேர் சிகிக்சை !

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் காட்சி அளிப்பதால் அவரை காண தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 25 -வது நாளான இன்று அத்திவரதரை காண காலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

இந்நிலையில் அத்திவரதரை காண வரிசையில் காத்துக்கொண்டு இருந்த சிறுவன் உட்பட 4 பேர் மயங்கி விழுந்தார்கள்.அவர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள மருத்துவ முகாமில் சிகிக்சை கொடுக்கப்பட்டது.

பிறகு நான்கு பேரும் தரிசனம் செய்ய அனுப்பி வைத்தனர்.இன்று மட்டும் 180 பேர் சிகிக்சை பெற்றதாகவும் , அவர்கள் அனைவரும் வரிசையில் காத்திருந்த போது ஏற்பட்ட சோர்வு காரணமாக சிகிக்சை பெற்றதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் ,சில பக்தர்கள் விரதம் இருந்து தரிசனத்திற்கு வருவதாகவும் ,வயதானவர்கள் தினமும் எடுத்து கொள்ளும் மாத்திரையை எடுத்து கொள்ளாமல் தரிசனத்திற்கு வருவதாகவும் அதனால் அவர்களுக்கு சிகிக்சை அளிக்க வேண்டி உள்ளது என கூறினார்கள்.

author avatar
murugan