முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், மருத்துவமனைக்கு பரிசோதனை ஒன்றிற்காக சென்றபொழுது, எனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

எனவே, கடந்த வரம் என்னுடன் தொடர்பு கொண்டவர்களை தயவுசெய்து தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனை சோதனை செய்யவும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து இவருக்கு நேற்றிரவு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து, பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.