தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முன்னாள் தமிழக ஆளுநர்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா.

தெலுங்கானாவின் ஆளுநராக தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை நியமனம் செய்யப்பட்டார்.கடந்த 8-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்றார் தமிழிசை.பதவி ஏற்ற முதல் நாளே 6 புதிய அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து  ஆளுநராக பதவியேற்றத்தை தொடர்ந்து அவருக்கு பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இன்று முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையா நேரில் சந்தித்து தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்தார்.