முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் .!

முன்னாள் இராணுவ அதிகாரிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் .!

வங்காள தேசத்தின் முதல் அதிபரும் , தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றவாளியாக  முன்னாள் ராணுவ அதிகாரி அப்துல் மஜித் கருதப்பட்டார்.இவர் மீது மேலும் 4 தலைவர்கள் கொலை வழக்கு இருந்தது.இந்நிலையில் அப்துல் மஜித் இந்தியாவில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்டது.

 சமீபத்தில் வங்காள தேசம் திரும்பிய அப்துலை டாக்கா போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் எப்போதும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்று இருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை நள்ளிரவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

author avatar
murugan
Join our channel google news Youtube