ஒரு மாதத்திற்கு 5000 பேருக்கு உணவு: சச்சின் முடிவு

கொரோனாவால் நாடு தழுவிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 5000 பேருக்கு உணவளிக்க சச்சின் முன்வந்துள்ளார். 

இந்தியாவில் 7,447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன. அதனால் மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவிகளை அளித்து வருகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு பணிக்கான நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஒரு மாதத்திற்கு 5,000 பேருக்கு உணவளிக்க முன் வந்துள்ளார். ஏற்கனவே சச்சின் கொரோனா தடுப்பு பணிக்காக ரூ.50 லட்சம் நிதி வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்