தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..!

தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..!

தென்காசி மாவட்டம் தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது, இந்நிலையிலோ நேற்று இரவு தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, மேலும் இதனால் மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் பாய்ந்து வருகிறது.

மேலும் ஐந்து பிரிவுகளில் தண்ணீர் விழும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒன்றாக அணைத்து பிரிவும் இணைந்து ஒரே பிரிவில் தண்ணீர் விழுகிறது, மேலும் பழைய குற்றால அருவிகளிலும் தண்ணீர் சீறிபாய்ந்து ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube