சிறு பிள்ளைத்தனமாக கொடி விஷயத்தில் நடந்து கொள்கின்றனர்!

ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொடி விவகாரத்தில், சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்வதாக  தெரிவித்திருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை எதிர்க்கத் தொடங்கியிருப்பதாகவும், நாடு முழுவதும், பாரதிய ஜனதா கட்சியை பல்வேறு கட்சிகள் எதிர்ப்பதாகவும் கூறினார். அதிமுகவில் ஆரம்ப காலத்திலிருந்து பொதுச்செயலாளர் பதவி தான் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற பதவி என்றும், தாம் கட்சி ஆரம்பித்தால், கட்சி விதிப்படி பதவியை இழுந்துவிடுவேன் என்பதாலேயே, அணியாக செயல்படுவதாக தினகரன் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment