கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த 5 பேர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கர்நாடகாவில் மாநிலம் மைசூர் அருகே உள்ள தட்டாஹள்ளியை சார்ந்தவர் ஓம் பிரகாஷ் (36)  அவரது நிறுவனம் ஒன்றை நடத்தி வந்து உள்ளார். தந்தை நாகராஜ் பட்டாச்சார்யா, 65, தாய் ஹேமலதா 60 மனைவி நிகிதா 28  மற்றும் மகன் ஆர்ய கிருஷ்ணா 4 நிகிதா எட்டு மாத கர்ப்பிணி என கூறப்படுகிறது.

இவர்கள்  குடும்பத்துடன் செவ்வாய்க்கிழமை முதல் குண்ட்லுப்பேட்டையில் உள்ள நந்தி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர்.இன்று காலை ஓம் பிரகாஷ் குடும்பத்தில் மனைவி உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் அவர்கள் கடன் தொல்லையால் இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இவர்களின் மரணம் அப்பகுதியை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube