நடுகடலில் மீனர்வர்கள் 20 பேர்..!குடிநீர் _உணவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவிப்பு ..!

நடுகடலில் மீனர்வர்கள் 20 பேர் குடிநீர், உணவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி சின்னத்துறை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 20 பேர் கடந்த 18 தேதி கொச்சி துறைமுகத்தின் வழியாக மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றனர்.
ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 20 பேரும் நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் மீனவர்கள் 20 பெரும் லட்சத்தீவு அருகே தித்திரா தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொழுது இரண்டு படகுகள் திடீன்று பழுதாகியதால்  உணவு ,குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்.மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் 20 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
kavitha