முதல் விக்கெட்டும் கேப்டன் தான்! நூறாவது விக்கெட்டும் கேப்டன் தான் ! அசத்திய பும்ரா !

நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில்  இந்திய அணி , இலக்கை அணியுடன் மோதியது. இப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில்  பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

முதலில் களமிங்கிய  இலங்கை  7 விக்கெட்டை பறிகொடுத்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. 265 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக இறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

இப்போட்டியில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ரா ஆட்டம் தொடக்கத்திலே இலங்கை அணியின் தொடக்க வீரர்களான திமுத் கருணாரத்ன , குசல் பெரேரா இருவரின் விக்கெட்டையும் பறித்தார். பின்னர் ஏஞ்சலோ மேத்யூஸ் விக்கெட்டையும் பறித்தார்.

இதன் மூலம் பும்ரா ஒருநாள் போட்டியில் 102 விக்கெட்டை பறித்து உள்ளார். பும்ரா ஒருநாள் போட்டியில் தனது முதல் விக்கெட்டை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்  விக்கெட்டை பறித்தார்.நேற்று பும்ரா தனது 100-வது விக்கெட்டை இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்ன விக்கெட்டை வீழ்த்தி 100-வது விக்கெட்டை நிறைவு செய்தார்.

இந்நிலையில் பும்ரா ஒருநாள் போட்டியில்  முதல் விக்கெட்டையும் , நூறாவது விக்கெட்டையும் இரு அணியின் கேப்டன்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan